

நிழல் உலகில் வாழும் கவிஞனுடன் நிழல் உலக தாதா ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது தாதா வெளியே தெரியாமல் ரகசியமாக வாழ்ந்து வருவது போலவே கவிஞனுடைய கவிதையும் மஹா மர்மத்தில் ஒளிந்திருந்தது தாதாவை கண்டுபிடிக்க இயலாமல் புலனாய்வுகள் விழி பிதுங்குவது போலவே கவிஞன் தன் கவிதையில் பொதிந்து வைத்த ரகசியமும் மஹா சிம்ம சொப்பனமாக இருந்தது உள்ளூர் போக்கிரி தாதா ஆனது போலவே சாமான்யக் குடியானவனே கவிஞனாயிருக்கிறானென நீட்ஷேவின் ஆவியுடன் வந்த பின் நவீன ஆய்வாளர்கள் ஒரு வழியாக கண்டு பிடித்தனர் உளவுத்துறை நிழல் உலக தாதாவை சுட்டுப்பிடிக்க ஆலோசனை நல்கியது போலவே கவிஞனுடைய கவிதையை கட்டுடைக்க நவீன விமர்சகர்கள் முன் வந்தனர் என்ன ஆச்சர்யம் நிழல் உலக தாதாவை நெருங்க முடிந்தும் தப்பித்து விடுவது போல கவிஞனும் ஒரு சொல்லில் அதிகார பாசிசத்திற்கும் ஓர் அர்த்தத்தில் வலதுசாரி மத வெறிக்கும் தப்பிச் சென்றபடியிருந்தான் வேறு வழியில்லாமல் கவிஞனுடைய குலம் கோத்திரத்தை ஆராய்ந்தால் ராகாப் வம்சத்தில் பிறந்திருக்கிறான் அவனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால் கவிஞன் நிஜத்தில் யாருடனும் பழகுவதில்லையாம் நிழல் தாதாக்களுக்கு நிகரான நிழல் காதலிகளுக்கு கவிதை எழுதியே மத்திய காலம் வந்தடைந்த அவன் நிழல் உலக தாதா போலவே யாருக்காக சம்பாதிக்கிறோமென்று தெரியாமலேயே யாருக்காகவோ எழுதியிருக்கிறான் விதியைப் பாருங்கள் நிழல் உலக தாதாவை நெருங்கி விட்டதாகச் சொல்லிய புலனாய்வுத் துறை மழைக்காலத்தில் ஜி. நாகராஜன் ரகசியமாக நடமாடிய அதே குறத்தி முடுக்கின் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த கவிஞனுடைய தொண்டைக் குழியில் படு கேவலமான துப்பாக்கி ரவையை ஆட்காட்டி விரல் சுழுக்க அழுத்தியிருக்கிறது ஒரே ரவையில் என்னவொரு சாதுர்யம் நிழல் உலக தாதாவும் ஒழிந்தான் நிழல் உலகக் கவிஞனும் இறந்தான் #ராகாப் பழைய ஏற்பாட்டு பைபிளில் வேசியாக குறிப்பிடப்படுபவள்